வெள்ளி, 22 மே, 2020

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின் 

நினைத்ததை முடிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. செய்கின்ற காரியங்களில் தடைகள் ஏற்படலாம். எதிர்ப்புகள் வலுக்கலாம். நம்பிக்கையைச் சிதைக்கும் கருத்துகள் காதில் விழலாம். உன்னால் முடியவே முடியாது என்ற கூக்குரல் ஒலிக்கலாம். இதைச் செய்து என்ன சாதிக்கப் போகிறாய் என்ற அறைகூவல் கேட்கலாம். பிழைக்கின்ற வேலையைப் பார் என வேண்டாத அறிவுரைகள் துரத்தலாம்.ஆனால், சாதிக்க வேண்டுமெனில் இவை யாவற்றையும் கடந்தே பயணிக்கப் பழக வேண்டியிருக்கிறது.  ஆயினும் சாதனையாளர்கள் பலரும் இவற்றை ஏணிகளாக்கிக் கொண்டே ஏறி வந்திருக்கின்றனர். சிகரம் தொட்டிருக்கின்றனர். உழைப்பிற்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை விட்டுவிட்டு, நம் உழைப்புப் பிறருக்குப் பயன் தருகின்ற வகையில் செயல்படுவதே சாலச் சிறந்தது. 
பிறக்கும் ஒவ்வொரு நாளையும் இனிதே வரவேற்போம். நம் சிந்தனைகளைப் புதிதாக்குவோம்.