நிறுத்தற்குறிகள்
பேசுகின்றபோது சில சொற்களுக்குப் பின்
இடைவெளி விடுதல், வேறு சில இடங்களில் அதிக இடைவெளி விடுதல், சொற்களையும் தொடர்களையும் ஏற்றஇறக்கத்தோடு ஒலித்தல் போன்ற முறைகளால் செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். எழுதும்போது பேச்சில் பயன்படுத்தும் மேற்கூறிய முறைகளைப் போன்று கால்புள்ளி [,], முற்றுப்புள்ளி [.], உணர்ச்சிக்குறி [!], கேள்விக்குறி [?] போன்ற குறிகளைப் பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் ‘நிறுத்தக்குறிகள்’ என்று கூறப்படுகின்றன. அவை பின்வருமாறு.
1.கால்புள்ளி (,)
2.அரைப்புள்ளி (;)
3.முக்கால்புள்ளி (:)
4.முற்றுப்புள்ளி (.)
5.முப்புள்ளி(...)
6. கேள்விக்குறி (?)
7. உணர்ச்சிக்குறி (!)
8. இரட்டை மேற்கோள்குறி (“ “)
9.ஒற்றை மேற்கோள்குறி (‘ ‘)
10. தனி மேற்கோள்குறி ( ‘ )
11. மேற்படிக்குறி (“)
12. பிறை அடைப்பு ( )
13. சதுர அடைப்பு [ ]
14. இணைப்புக்கோடு (வு)
15. இணைப்புச் சிறுகோடு (-)
16. சாய்கோடு (/)
17. அடிக்கோடு (_)
18. உடுக்குறி (*)
காற்புள்ளி
பொருட்களைத்
தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.
சான்று
- ஆடுகள், மாடுகள்,
நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.
விளிப்பெயர்களை
அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - ஆருயிர்த் தந்தையே, வணக்கம்.
வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கம்
கருதி, காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘உங்கள்
வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்’ என்றான்.
சான்று
– மேலோர், கீழோர்,
அரசன் என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.
ஆனால், ஆயின்,
ஆகையால், எனவே போன்ற சொற்களுக்கு முன்
காற்புள்ளி இட வேண்டும்.
சான்று - கந்தன் மிக நல்லவன்; ஆனால், அவன் படிப்பில் குறைந்தவன்.
அரைப்புள்ளி
பல செயல்களைக்
குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.
சான்று - கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள்; மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை
அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.
சொற்றொடரில் கூறிய
ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.
சான்று - முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ்,
நாடகத்தமிழ்.
முற்றுப்புள்ளி
சொற்றொடர்கள்
பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
சான்று - அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.
வினாக்குறி
வினாப்பொருளைத்
தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும்.
சான்று – திருக்குறளை இயற்றியவர் யார்?
உணர்ச்சிக்குறி
மகிழ்ச்சி, வியப்பு,
அச்சம், அவலம், இரங்கல்
போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
சான்று - போட்டியில் எனது நண்பர்
வென்றுவிட்டார்! (மகிழ்ச்சி)
இடையீட்டுக் குறி ( ) ]
ஒரு சொற்றொடரின்
இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச்
சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின்
இருபக்கங்களிலும், சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும்.
சான்று - திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை
தேடித்தருகின்றது.
பிறைக்குறி
மொழிபெயர்க்கும்
போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி
இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர்.
சான்று - பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம்
இருத்தல் வேண்டும்.
பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும் போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும்,
இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
சான்று - ‘அறஞ்செய்ய விரும்பு’ என்று ஒளவையார் கூறியுள்ளார்.
இரட்டை மேற்கோள்
குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர்
கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
சான்று - ‘அ, இ, உ’
– இவை மூன்றும் சுட்டெழுத்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக