செவ்வாய், 30 ஜூன், 2020

நமச்சிவாயத் திருப்பதிகம்

திருநாவுக்கரசர் - நமச்சிவாயத் திருப்பதிகம்

பாடலும் விளக்கமும்

பாடல் எண் - 1

சொல் துணை வேதியன் சோதி வானவன்
பொன்துணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கல்துணைப் பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும்
நல்துணையாவது நமச்சிவாயவே

விளக்கம்

சொற்களுக்கெல்லாம் வேதமாக விளங்கக்கூடியவன் சிவபெருமான். அவன் சோதி வடிவமாகக் காட்சியளிக்கின்றான். அவனுடைய பொன் போன்ற திருவடிகளை மனதில் பொருத்திக் கைதொழுது வணங்கினால், நம்மைக் கல்லில் கட்டிக் கடலில் வீசினாலும் நமசிவாய என்ற மந்திரம் கல்லைத் தெப்பமாக மாற்றி நம்மைக் கரை சேர்க்கும்.


பாடல் எண் - 2

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே

விளக்கம்

இறைவிகள் யாவரும் தாமரையில் வீற்றிருக்கின்ற காரணத்தால் பூக்களுக்கெல்லாம் அணிகலனாகத் திகழ்கின்றது தாமரை. இறைவனுக்குரிய அபிடேகப் பொருட்களான பால், தயிர், நெய், கோசலம் (சாணம்), கோமியம் ஆகியவற்றைத் தருகின்ற காரணத்தால் விலங்குகளுக்கெல்லாம் அணிகலனாக பசு திகழ்கின்றது. நீதி தவறாது ஆள்கின்ற காரணத்தால் அரசனுக்கு அணிகலன் செங்கோன்மை. அதுபோல நம் நாவினுக்குச் சிறந்த அணிகலன் நமசிவாய என்னும் மந்திரமாகும்.

பாடல் - 3

விண்உற அடுக்கிய விறகின் வெவ்ழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுபப்து நமச்சிவாயவே

விளக்கம்

வானளவிற்கு விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்திருப்பினும் ஒரு சிறிய தீக்குச்சி அவற்றைச் சாம்பலாக்கி விடும். அதுபோல இந்த உலகத்தில் நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் நமசிவாய என்ற மந்திரம் நீக்கிவிடும்.

பாடல் - 4

இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கல்கீழ்க் கிடக்கினும் அருளினாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே

விளக்கம்

வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும், வேறு ஒரு கடவுளிடம் சென்று  யாசித்து “என்னைக் காப்பாற்று” என்று கூற மாட்டோம். மலையின்கீழ்ச் சிக்குண்டு கிடப்பினும் எமக்கு உண்டான நடுக்கத்தைக் கெடுத்துக் காப்பாற்றும் வல்லமை கொண்டது நமசிவாய என்னும் மந்தரமாகும். 

பாடல் - 5

வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறு அங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும்நீள் முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே

விளக்கம்

சிவபெருமானை எண்ணி விரதம் இருப்பவர்களுக்குத் திருநீறு அணிகலனாக விளங்குகின்றது.  நான்கு மறை, ஆறு அங்கம் ஓதுதல் அந்தணர்களுக்கு அணிகலனாகும். திங்களுக்கு அணிகலன் சிவபெருமான் திருமுடி. அதுபோல நம் அனைவருக்கும் அணிகலன் நமசிவாய என்னும் மந்திரமாகும்.

பாடல் - 6

சலம்இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலம்இலன் நாள்தோறும் நல்குவான் நலம்
குலம் இலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர் 
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே

விளக்கம்

சிவருமானைச் சரணடைந்தவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. அனைவருக்கும் நாள்தோறும் நலத்தை அளிப்பவன். நல்ல குலத்தில் பிறவாதிருப்பினும் சிவபெருமானின் நாமத்தை ஓதினால் அவர்களுக்கும் நன்மை அளித்துக் காப்பாற்றும் தன்மை கொண்டது நமசிவாய என்னும் மந்திரமாகும்.

பாடல் - 7

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடச் சென்றாலும்
ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே

விளக்கம்

வீடு பேறு அடைய விரும்பிய தொண்டர்கள் ஒன்று கூடிச் சிவநெறியைப் போற்றினர். நானும் அந்நெறியைத் தேடிச் சென்று, நமசிவாய மந்திரத்தை நாடினேன். அம்மந்திரம் என்னைப் பற்றிக் கொண்டு நன்மைகள் பலவற்றை அளித்தது.

பாடல்  - 8 

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே

விளக்கம் 

இல்லத்தில் ஏற்றி வைக்கப்படும் விளக்கு புற இருளை நீக்கும். சொல்லின் அகத்தே நின்று ஒளியுடையதாக விளங்கிப் பலரும் காணுமாறு திகழ்கின்ற நமசிவாய விளக்கு நம் அக இருளை நீக்கிவிடும்.


பாடல் - 9 

முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்நெறியே சரண்ஆதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்நெறியாவது நமச்சிவாயவே

விளக்கம்

சைவநெறியே முதல் நெறி. அந்நெறியின் தலைவன் மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமான். அவருடைய நெறியில் சரணடைந்தவர்களுக்கு நல்ல வழியைக் காட்டுவது நமசிவாய என்னும் மந்திரமாகும்.


பாடல் - 10

மாப்பிணைத் தழுவிய மாது ஓர் பாகத்தான்
பூப்பிணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே

விளக்கம்

மான் போன்ற அழகிய உமா தேவியைத் தன் இடப்பாகத்தில் வைத்திருக்கும் சிவபெருமானின் பூப்போன்ற திருவடிகளை மனதில் பொருத்திக் கைதொழுது வணங்கி, நமசிவாய மந்திரத்தைக் கூறினால் வாழ்நாளில் எத்தகைய துன்பங்களும் நம்மைத் தொடர்வதில்லை.


சனி, 27 ஜூன், 2020

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பாடப்பட்டவை. பத்தாம் நூற்றாண்டில் இராசராசச் சோழன்கோவில்களில் வாய்மொழியாகப் பாடப்பட்ட தேவாரப் பாடல்களைத் தொகுக்க எண்ணினார். நம்பியாண்டார் நம்பி என்பவர் மூலம் சிதம்பரம் கோயிலில் தேவாரப் பாடல்கள் இருப்பதை அறிந்தார். தேவாரம் பாடிய மூவர் வந்தால் மட்டுமே அறையின் கதவைத் திறக்க முடியும் என்ற நிலையில்தேவார மூவரையும் சிலை வடிவில் அங்குக் கொண்டு வந்து நிறுத்தி அறையின் கதவைத் திறக்கச் செய்தார். அங்கே ஓலைச்சுவடிகள் பல செல்லரித்திருந்ததைக் கண்டு மனம் வருந்தி எஞ்சியவற்றைப் பாதுகாத்து நம்பியாண்டார் நம்பியிடம் ஒப்படைத்தார். கி.பி.பதினோராம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி அவற்றை பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார். பின்னர் அநபாயச் சோழனின் வேண்டுகோளுக்கிணங்கிச் சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் பன்னிரெண்டாவது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.

 திருமுறை - விளக்கம்

     திரு என்றால் தெய்வீக நூல் என்று பொருள்படும். முறை என்றால்  வாழ்வினை நெறிப்படுத்தக்கூடிய நூல் என்று பொருள்படும்.  வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பல கருத்துகள் தாங்கிய தெய்வீக நூல் என்ற பொருள்பட திருமுறை என்ற பெயர் விளங்குவதாயிற்று. 

தேவாரம் - விளக்கம்

    தே + ஆரம் = தேவாரம். தேன் போன்ற இனிமையான பாடல்களை இறைவனுக்கு அணிகலனாகச் சூட்டியமையால் தேவாரம் எனப்பட்டது.

 தேவார மூவர் 

       திருநாவுக்கரசர்திருஞானசம்பந்தர்சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடிய பெரியோர்கள் ஆவர். இவர்கள் பாடிய பதிகங்கள் யாவும் தேவாரம் என்ற பெயரால் அறியப்படுகின்றன.

 

ன்னிரு திருமுறைகளின் தொகுப்பு

1,2,3ஆம் திருமுறைகள்

திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் 1,2,3ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்படுகிறது. 

4,5,6 ஆம் திருமுறைகள்

திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பாடல்கள் 4,5,6ஆ-ம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இவரின் பாடல்கள் தொண்டின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை விளக்குகின்றன.

7ஆம் திருமுறை

சுந்தரர் பாடிய பாடல்கள் 7ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள் திருப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது. 

8ஆம் திருமுறை

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும்திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. 

9ஆம் திருமுறை

திருமாளிகைத்தேவர்கருவூர்த்தேவர்பூந்துருத்தி நம்பிகண்டராதித்தர்வேணாட்டடிகள்திருவாலியமுதனார்புருசோத்தம நம்பிசேதிராயர்சேந்தனார் ஆகிய ஒன்பது நபர்களால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது. இத்திருமுறையில் உள்ள நூல்கள் திருவிசைப்பாதிருப்பல்லாண்டு ஆகியவை ஆகும். 

10ஆம் திருமுறை

திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் பக்தியோடு யோகாசன முறைகளையும் எடுத்துக் கூறுகிறது. 

இந்நூலுக்குத் திருமந்திர மாலைதமிழ் மூவாயிரம் என்னும் வேறு பெயர்களும்உண்டுதிருமந்திரம் 9 தந்திரங்களும் 232 அதிகாரங்களும் கொண்டுள்ளதுஇந்நூலை இயற்றிய திருமூலர் திருவாவடுதுறை அரச மரத்தடியில் யோகம் இருந்தார்ஆண்டுக்கு ஒருமுறை விழித்தெழுந்து ஒரு பாடல் வீதம் 3000 பாடல்கள் பாடியதாகக் கூறப்படுகிறது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற புகழ் பெற்ற தொடர் இந்நூலில் இருந்தே பெறப்பட்டது.

11ஆம் திருமுறை

திருஆலவாயுடையார்காரைக்கால்அம்மையார்ஐயடிகள்காடவர்கோன்,சேரமான்பெருமான்நக்கீரர்கல்லாடர்கபிலர், பரணர்,இளம்பெருமாள்அடிகள்அதிராவடிகள்,பட்டினத்தடிகள்நம்பியாண்டார் நம்பி ஆகிய பதினோரு நபர்களால் பாடிய பாடல்கள் 11-ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. 11-ஆம் திருமுறையில் உள்ள நூல்கள் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

12ஆம் திருமுறை

63 நாயன்மார்களின் வரலாற்றைப் பற்றி சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் 12-ஆம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது. சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்உத்தமச் சோழப் பல்லவன் என்ற பட்டம் பெற்றவர்அநபாயச் சோழன் சிந்தாமணி நூலின் மேல் விருப்பம் கொண்டிருந்ததைக் கண்டு அம்மன்னனைச் சைவத்தின் மீது திருப்ப சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் பாடினார் என்பர்திருத்தொண்டர் புராணமே நாளடைவில் பெரியபுராணம் என வழங்கப்பட்டு வருகிறது.

சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகவும்நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு சேக்கிழார் பெரியபுராணம்பாடியுள்ளார்இந்நூல் 3 சருக்கங்களையும் 4286 பாடல்களையும் கொண்டுள்ளது


பன்னிரு திருமுறைகளின்

சிறப்புப் பெயர்கள்

·      முதல் திருமுறையின் முதல் பாடல் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குகிறது. இப்பாடலின் முதல் எழுத்தான தோ என்பது த் + ஓ எனப் பிரிக்கப்படுகிறது. இதில் ‘’ என்பது பிரவண மந்திரமான முதல் எழுத்தைக் குறிக்கிறது. பன்னிரெண்டாவது திருமுறையான திருத்தொண்டர் புராணத்தின் முதல் பாடல் ‘உலகெல்லாம்’ என்று தொடங்குகிறது. இதில் கடைசி எழுத்து ‘ம்’ என்பது பிரவண மந்திரமான கடைசி எழுத்தைக் குறிக்கிறது. எனவே, இப்பாடல்கள் வேதங்களின் விளக்கங்கள் எனப் போற்றப்படுகின்றன. 

         பன்னிரு திருமுறைகளில் முதல் ஒன்பது திருமுறைகள் இறைவனை வாழ்த்திக் கூறுவதால் தோத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 10ஆம் திருமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளதால் சாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.   11ஆம் திருமுறை பாடல்கள் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.   12ஆம் திருமுறை பாடல்கள் 63 நாயன்மார்களின் வாழ்க்கையை விளக்குவதால் இது வரலாறு என்று அழைக்கப்படுகிறது.