திருநாவுக்கரசர் - நமச்சிவாயத் திருப்பதிகம்
பாடலும் விளக்கமும்
பாடல் எண் - 1
சொல் துணை வேதியன் சோதி வானவன்
பொன்துணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கல்துணைப் பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும்
நல்துணையாவது நமச்சிவாயவே
விளக்கம்
சொற்களுக்கெல்லாம் வேதமாக விளங்கக்கூடியவன் சிவபெருமான். அவன் சோதி வடிவமாகக் காட்சியளிக்கின்றான். அவனுடைய பொன் போன்ற திருவடிகளை மனதில் பொருத்திக் கைதொழுது வணங்கினால், நம்மைக் கல்லில் கட்டிக் கடலில் வீசினாலும் நமசிவாய என்ற மந்திரம் கல்லைத் தெப்பமாக மாற்றி நம்மைக் கரை சேர்க்கும்.
பாடல் எண் - 2
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே
விளக்கம்
இறைவிகள் யாவரும் தாமரையில் வீற்றிருக்கின்ற காரணத்தால் பூக்களுக்கெல்லாம் அணிகலனாகத் திகழ்கின்றது தாமரை. இறைவனுக்குரிய அபிடேகப் பொருட்களான பால், தயிர், நெய், கோசலம் (சாணம்), கோமியம் ஆகியவற்றைத் தருகின்ற காரணத்தால் விலங்குகளுக்கெல்லாம் அணிகலனாக பசு திகழ்கின்றது. நீதி தவறாது ஆள்கின்ற காரணத்தால் அரசனுக்கு அணிகலன் செங்கோன்மை. அதுபோல நம் நாவினுக்குச் சிறந்த அணிகலன் நமசிவாய என்னும் மந்திரமாகும்.
பாடல் - 3
விண்உற அடுக்கிய விறகின் வெவ்ழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுபப்து நமச்சிவாயவே
விளக்கம்
வானளவிற்கு விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்திருப்பினும் ஒரு சிறிய தீக்குச்சி அவற்றைச் சாம்பலாக்கி விடும். அதுபோல இந்த உலகத்தில் நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் நமசிவாய என்ற மந்திரம் நீக்கிவிடும்.
பாடல் - 4
இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கல்கீழ்க் கிடக்கினும் அருளினாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே
விளக்கம்
வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும், வேறு ஒரு கடவுளிடம் சென்று யாசித்து “என்னைக் காப்பாற்று” என்று கூற மாட்டோம். மலையின்கீழ்ச் சிக்குண்டு கிடப்பினும் எமக்கு உண்டான நடுக்கத்தைக் கெடுத்துக் காப்பாற்றும் வல்லமை கொண்டது நமசிவாய என்னும் மந்தரமாகும்.
பாடல் - 5
வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறு அங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும்நீள் முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே
விளக்கம்
சிவபெருமானை எண்ணி விரதம் இருப்பவர்களுக்குத் திருநீறு அணிகலனாக விளங்குகின்றது. நான்கு மறை, ஆறு அங்கம் ஓதுதல் அந்தணர்களுக்கு அணிகலனாகும். திங்களுக்கு அணிகலன் சிவபெருமான் திருமுடி. அதுபோல நம் அனைவருக்கும் அணிகலன் நமசிவாய என்னும் மந்திரமாகும்.
பாடல் - 6
சலம்இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலம்இலன் நாள்தோறும் நல்குவான் நலம்
குலம் இலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே
விளக்கம்
சிவருமானைச் சரணடைந்தவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. அனைவருக்கும் நாள்தோறும் நலத்தை அளிப்பவன். நல்ல குலத்தில் பிறவாதிருப்பினும் சிவபெருமானின் நாமத்தை ஓதினால் அவர்களுக்கும் நன்மை அளித்துக் காப்பாற்றும் தன்மை கொண்டது நமசிவாய என்னும் மந்திரமாகும்.
பாடல் - 7
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடச் சென்றாலும்
ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே
விளக்கம்
வீடு பேறு அடைய விரும்பிய தொண்டர்கள் ஒன்று கூடிச் சிவநெறியைப் போற்றினர். நானும் அந்நெறியைத் தேடிச் சென்று, நமசிவாய மந்திரத்தை நாடினேன். அம்மந்திரம் என்னைப் பற்றிக் கொண்டு நன்மைகள் பலவற்றை அளித்தது.
பாடல் - 8
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே
விளக்கம்
இல்லத்தில் ஏற்றி வைக்கப்படும் விளக்கு புற இருளை நீக்கும். சொல்லின் அகத்தே நின்று ஒளியுடையதாக விளங்கிப் பலரும் காணுமாறு திகழ்கின்ற நமசிவாய விளக்கு நம் அக இருளை நீக்கிவிடும்.
பாடல் - 9
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்நெறியே சரண்ஆதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்நெறியாவது நமச்சிவாயவே
விளக்கம்
சைவநெறியே முதல் நெறி. அந்நெறியின் தலைவன் மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமான். அவருடைய நெறியில் சரணடைந்தவர்களுக்கு நல்ல வழியைக் காட்டுவது நமசிவாய என்னும் மந்திரமாகும்.
பாடல் - 10
மாப்பிணைத் தழுவிய மாது ஓர் பாகத்தான்
பூப்பிணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே
விளக்கம்
மான் போன்ற அழகிய உமா தேவியைத் தன் இடப்பாகத்தில் வைத்திருக்கும் சிவபெருமானின் பூப்போன்ற திருவடிகளை மனதில் பொருத்திக் கைதொழுது வணங்கி, நமசிவாய மந்திரத்தைக் கூறினால் வாழ்நாளில் எத்தகைய துன்பங்களும் நம்மைத் தொடர்வதில்லை.
M. Vishali bscn&d b section thanks for understandable notes
பதிலளிநீக்குC.Keerthana Bsc chemistry thanks for the notes for the each songs
பதிலளிநீக்குS.ishali bsc chemistry thanks for the notes mam
பதிலளிநீக்குS.jayashree 2nd b.sc chem notes were understandable mam...thnx you
பதிலளிநீக்குM. Vindhya sree bsc chemistry.. Thanks for ur notes mam
பதிலளிநீக்குM. Vindhya sree bsc chemistry.. Thanks for ur notes mam
பதிலளிநீக்குK. Saranya. Bsc chemistry 2nd year. Arumaiyana pathivu amma
பதிலளிநீக்குK. Saranya. Bsc chemistry 2nd year. Arumaiyana pathivu amma
பதிலளிநீக்குVismaya.k.k ,2nd B.sc.chemistry, Arumaiyana padhivu amma
பதிலளிநீக்குK. Keerthana
பதிலளிநீக்குBsc 2nd yr chemistry
Thanku for the notes mam
S. Manisha, 2nd year bsc. Chemistry. Thank you for the notes mam. It's clear and understandable mam
பதிலளிநீக்குK. Sandhiya bsc n&d 2ndyr b sec. Arumaiyana pathivu amma
பதிலளிநீக்குS. Megha, 2nd bsc chemistry, arumaiyana pathivu mam
பதிலளிநீக்குSowmiya.S ,2nd yr b.sc n-&d, thanks for understandable notes
பதிலளிநீக்குH.Yuvashree
பதிலளிநீக்குB.SC chemistry
Thanks for ur notes mam
S.Sruthi
பதிலளிநீக்கு2nd yr.bsc.chemistry
Thanks for the notes mam
V. Madhumitha,2nd Bsc chemistry, thank you for the notes mam it can understand
பதிலளிநீக்குRishi Vanthini.v( n&d b sec 2 ND year)
பதிலளிநீக்குIt was interesting and useful mam
Rishi vanthini.v( n&d b sec 2 nd year)
பதிலளிநீக்குThank you mam it was nice and useful.
C. Kayalvizhi
பதிலளிநீக்கு2nd year bsc chemistry
Easy to understand mam
V.Swetha
பதிலளிநீக்குB.sc chemistry
Thanks for the notes mam
Subhashini.P
பதிலளிநீக்குBsc N&D bsec
Thank you mam its understandable
V.Swetha
பதிலளிநீக்குB.sc chemistry 2nd year
Thank for the notes mam
K.Sukithasree
பதிலளிநீக்கு2nd Bsc Chemistry
Thanks for the notes mam.
M.Anusuya b.sc chemistry thank for the notes mam
பதிலளிநீக்குG. Jayashree
பதிலளிநீக்கு2nd B.sc chemistry
Thanks for the notes mam.
R.Dhanalakshmi
பதிலளிநீக்குBsc.chemistry 2nd yr
Thanks for the notes mam
Easy to understand ,thank u mam for Ur information
பதிலளிநீக்குS. Janani
பதிலளிநீக்கு2nd year B. Sc. Chemistry
Thank you for the notes mam
Samyuktha.G
பதிலளிநீக்குN&D 2nd year b sec
Thank you mam
Sushmitha.k.c
பதிலளிநீக்குN&D B sec
Easy to understand ,thanks for Ur kind information
S.D.Chandhini
பதிலளிநீக்கு2nd bsc chemistry
Thank you for the explanation mam
S. Vinisha..2nd bsc chemistry.. Thankyou for the explanation mam
பதிலளிநீக்குYamini. J N & D B sec, nice explanation mam
பதிலளிநீக்குShakila.E
பதிலளிநீக்குBsc N&D 2nd year
Thank you mam for the explanation
Thank u mam it's very use full
பதிலளிநீக்குReshma 2 yr chem
E. Sivaranjani
பதிலளிநீக்குB. SC Chemistry 2nd year
Thank you so much for the information mam, it's very useful.
S.priyadharshini
பதிலளிநீக்குB.sc chemistry 2nd yr
Thank you so much mam
B.SOMILA
பதிலளிநீக்குB.Sc chemistry 2nd year
Thank you mam its very useful for learning
A.Soniya
பதிலளிநீக்குB.Sc N & D 2nd year
Thank you mam for interesting and useful video
Notes mam
நீக்குM. ASMIYA BSC CHEMISTRY Il year
பதிலளிநீக்குThank you for notes mam
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதெளிவான விளக்கம் நன்றி
பதிலளிநீக்குP. Jayapradha
B.Sc(chemistry)2nd year
M.Gopika
பதிலளிநீக்கு2nd bsc chemistry
It is very useful to learn .thank u mam
A. Umul Fowmidha
பதிலளிநீக்கு2nd Bsc, N&D
It is very useful mam
Thank you mam
Yogeswari.D
பதிலளிநீக்கு2ndn&d b' sec
Thank u so much mam
It is very useful
S.Snegha(02/09/2001)
பதிலளிநீக்கு2nd year n&d'b'
Thank u mam..very useful