தமிழிலக்கிய வரலாறு
பல்லவர் கால பக்தி இலக்கியங்கள்
முன்னுரை
- சைவ இலக்கியங்கள்
- வைணவ இலக்கியங்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.
பக்தி
இலக்கியம் தோன்றக் காரணம்
சங்ககாலத்திற்குப் பிறகு
சமண, பௌத்த சமயங்கள் தோன்றின.
அவையாவும் இன்பத்தை வெறுத்து மறுமையைத் தேடுவதொன்றே இறைவனை அடையும் வழி என்று பறை
சாற்றின. அதனால் மக்கள் காதலை வெறுத்துத் துறவறம் நோக்கிச் சென்றனர். ஆடல் பாடல்
இறைவனுக்கு எதிரானவை என்ற அச்சமயங்களின் கருத்துரையால், நாட்டில் கலைகள்
தோன்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. அச்சமயத்தில் சைவப் பெரியோரும் ஆழ்வார்களும்
இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்றும், உலக இன்பங்களை அனுபவித்துக் கொண்டே இறைவனின் அருளைப் பெற முடியும்
என்றும், ஆடலும், பாடலும் இறைவனுக்குரியவை
என்றும் கருத்துரைத்தனர். சமயங்களில் புரட்சி ஏற்பட்டது, மக்கள் சைவ, வைணவ சமயத்தை ஏற்றனர்.
பக்தி இலக்கியங்களின் சிறப்பு
நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடிய பதிகங்களும், பிரபந்தங்களும் இசைப் பாடல்களாக அமைந்திருந்தமையால் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன.
திருமுறைகளும் பிரபந்தங்களும்
சைவ நாயன்மார்கள் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகள் என்றும், ஆழ்வார்கள் பாடிய
பிரபந்தங்கள் நாலாயிரதிவ்யப் பிரபந்தங்கள் என்றும் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூல்களின் சிறப்புகளை,
பன்னிரு திருமுறைகள்,
பன்னிரு ஆழ்வார்கள்,
என்ற தலைப்பில் விளக்கமாகக் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக