செவ்வாய், 14 அக்டோபர், 2025

TANSCHE - விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

 

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் ஆட்சியானது இமயம் முதல் குமரி வரை விரிவடைந்தது. டெல்லி, அயோத்தி, மைசூர், ஐதராபாத், கர்நாடகம், சூரத், தஞ்சை ஆகிய பகுதிகள் யாவும் ஆங்கிலேயரின் உடைமைகளாயின. தஞ்சை சரபோஜி மன்னன், வெல்லெஸ்லி பிரபுவிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு 1799இல் தான் வாழ்ந்து வந்த கோட்டை ஒன்றைத் தவிர தன் தேசம் முழுவதையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விட்டான்.

வேலூர்க் கலகம்

ஆங்கிலேயச் சேனாதிபதி இராணுவச் சிப்பாய்களின் நடைமுறையில் சில ஒழுக்க விதிகளைப் பிறப்பித்ததன் விளைவாக வேலூர்க் கோட்டையில் புதிய நடைமுறைகளை எதிர்த்துக் கலகம் தோன்றியது. திப்புவின் மக்கள் இக்கிளர்ச்சியைத் தூண்டி விட்டனர். அதனால் கிளர்ந்து எழுந்த சிப்பாய்கள் நூறு ஆங்கிலேயர்களைக் கொன்றனர். இது வரலாற்றில் வேலூர்க் கலகம் என்றும், வடக்கில் சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாகவும் கருதப்பட்டது.

காங்கிரஸ் பேரவை

கி.பி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியர்களுக்கு இந்திய அரசாட்சியிலும், அரசாங்க அலுவல்களிலும் பதவிகள் கொடுக்கப்ட வேண்டும் என்று அறிஞர் சிலர் ஒரு கிளர்ச்சியை உருவாக்கி, இந்திய தேசியப் பேரியக்கம் ஒன்றை ஏற்படுத்தினர். இதுவே காங்கிரஸ் பேராயம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. இவ்வியக்கத்தில் பாலகங்காதர திலகர் போன்ற இந்தியத் தலைவர்கள் சிறந்து விளங்கினர். இவ்வியக்கத்தின் முயற்சியால் படித்த இந்தியர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், பலதுறை உயர் அலுவலர்களாகவும் நியமனம் பெற்றனர். 1914இல் இருந்து காந்தியடிகள் இவ்வியக்கத்தில் செல்வாக்கு பெற்றதால், அதன் பின் சுதந்திரப் போராட்டம் அகிம்சைவழி அறப்போராட்டமாக மாறியது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள்

தமிழ்நாட்டு விடுதலைப்போரில் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், கட்டபொம்மன், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர். வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், தியாகி விஸ்வநாததாஸ், திருப்பூர் குமரன், இராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராசர், தந்தை பெரியார் ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

கப்பலோட்டிய தமிழன்

சுதேசி இயக்கத்தை வலுப்படுத்த, சுதேசி கப்பல் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் விட்டு கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்பட்டவர் வ.உசி. திலகரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 36 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுத்த செம்மல் என்னும் பெயர் பெற்றார்.

பாரதியார்

பாரதியார் தம் உணர்வூட்டும் கவிதைகளால் மக்களின் மனதில் விடுதலை வேட்கையை உண்டாக்கினார். இவரது கவிதைகளையும் இவர் நடத்திய இதழ்களையும் ஆங்கில அரசு தடை செய்து அவரை கைது செய்ய முனைப்புக் காட்டியது.

 தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்பு ஏற்படுத்திய தாக்கம் இராஜாஜி, பெரியார், சத்தியமூர்த்தி, காமராஜர் ஆகியோரால் பேரியக்கமாக வளர்ந்து நின்றது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தனிமனித விடுதலையையும், பகுத்தறிவுச் சிந்தனையையும் தந்தது. இவர்களோடு வ.வே.சு.ஐயர், திரு.வி.க, பா.ஜீவானந்தம், கே.பி.சுந்தராம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மதுரை வைத்தியநாத ஐயர் போன்ற பலரும் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக