சனி, 20 ஜூலை, 2024

பண்டைத் தமிழகத்தின் விளையாட்டுகள்

பண்டைத் தமிழகத்தின் விளையாட்டுகள்

ஒரு நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் விளையாட்டுகளும் பொழுதுபோக்கும் முக்கியமானவையாகும்.

குழந்தைகள் விளையாட்டு

  • குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடினர்.
  • முச்சக்கரத் தேர் ஓட்டினர்.
  • பொம்மை வைத்தாடுதல், மடுவில் குதித்து மூழ்கி மண் எடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடினர்.
  • குழந்தைகளுக்கு அம்புலி காட்டி விளையாடுவதுமுண்டு.
  • பவழப் பலகைமேல் இரு யானைப் பொம்மைகள் ஒன்று மற்றொன்றைக் குத்துவதைப்போலச் செதுக்கப் பொருத்தி வைத்து விளையாடினர் என்பதைக் குறுந்தொகை 61ஆவது பாடல் காட்டுகின்றது.

சிறுவர் விளையாட்டு

  • சிறுவர்கள் நீர் மடுவில் துடும் எனக் குதித்து மூழ்கி மண்ணை எடுத்து வந்து கரை மேல் நின்ற சிறுமியருக்கு வியப்பூட்டி மகிழ்வர்.

சாதாரண மக்களின் விளையாட்டு

  • கட்டங்கள் அமைத்து, வட்டாடுவதையும், கால் பந்தாட்டத்தையும் சாதாரண மக்கள் விளையாடினர்.
  • ஆடவரும் பெண்டிரும் ஆறுகளிலும் குளங்களிலும் புனலாடி மகிழ்ந்துள்ளனர்.

ஆண்களின் விளையாட்டுகள்

  • இளைஞர்கள் ஏறு தழுவி விளையாடியுள்ளனர்.
  • ஆண்கள் வாள் பயிற்சி, சிலம்பப் பயிற்சி, மல்யுத்தப் பயிற்சி போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதோடு சடுகுடு விளையாடும் பழக்கமும் இருந்துள்ளது.
  • விலங்குகளைக் கருவியாகக் கொண்டு நடத்தப்படும் போட்டிகளான கடாப்போர், கோழிப்போர், ஏறுதழுவல் ஆகிய விளையாட்டுகள் ஆண்களின் விளையாட்டில் முக்கியத்துவம் பெற்றன.
  • மன்னர்களுக்கு வேட்டையாடுதல் பொழுதுபோக்காக இருந்துள்ளது.
  • நாட்டுப்புறங்களில் உறியடித்தலை ஒரு விளையாட்டாக விளையாடியுள்ளனர்.

பெண்களின் விளையாட்டுகள்

  • பந்துகளைக் கொண்டு கழங்காடுதல் பெண்களின் விளையாட்டாகும்.
  • பாவைகளை வைத்தாடும் ஓரை என்ற விளையாட்டு முக்கியப் பொழுது போக்காகும்.
  • மணற்பாவை வனைந்து விளையாடினர். இது வண்டலிழைத்தல் எனப்பட்டது.
  • தண்ணீரில் பாய்ந்து நீராடி விளையாடுவதுண்டு.
  • அம்மானை, ஊசல் ஆகியனவும் பெண்களின் விளையாட்டுகளாகும்.
  • விளையாடும்போது வரிப்பாட்டு பாடுவர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக