திருஞானசம்பந்தர் தேவாரம்
பாடல்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்ல அஃது கழுமல வளநகர்
பெண்ணின் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே
விளக்கம்
இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் வளமோடு இன்பமாக வாழலாம். தினமும் இறைவனை நினைத்து வழிபட்டால் குறைவில்லாத முக்தி இன்பத்தை அடையலாம். இத்தகைய நன்மையை அருள கழுமலம் என்ற ஊரில் உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருக்கின்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக