குலசேகர ஆழ்வார்
பாடல்
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே
விளக்கம்
அளவில்லாத செல்வத்துடன் தேவமகளிர்சூழ வானுலகத்தை ஆளுகின்ற பெரும் வாய்ப்பையும், மண்ணுலகை ஆளுகின்ற வாய்ப்பையும் நான் விரும்பவில்லை. தேன் நிரம்பிய பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் உள்ள நீர்ச்சுனையில் மீனாகப் பிறக்கும் வாய்ப்பு கிடைக்கவே தவம் இருக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக