குறுந்தொகை
திணை: மருதம் பாடியவர்: மிளைக் கந்தனார்.
துறை: வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.
துறை விளக்கம்: தன்னுடன் ஊடல் கொண்டிருக்கும்
தலைவி, தன்னை
மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டி, தோழியின் உதவியை
நாடுகின்றான். அதற்குத் தோழி பதில் கூறுகின்றாள்.
பாடல்
வேம்பின்
பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங்
கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பின்
பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள்
தண்ணிய தரினும்
வெய்ய
உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால்
அன்பின் பாலே.
விளக்கம்
தோழி தலைவனிடம்,
“தலைவனே! என் தோழியாகிய தலைவி, முன்பு உன்னிடம் வேப்பங்காயைத்
தந்தாலும், அவள் மீது கொண்ட காதலால், வேப்பங்காயை இனிமையான வெல்லம்
என்று பாராட்டினாய். இப்போது பாரியின் பறம்பு மலையிலுள்ள சுனையில் குளிர்ச்சி
மிகுந்த இனிமையான நீரைத் தந்தாலும், அதை வெப்பமுடையது என்றும், உவர்ப்புச் சுவை உடையது
என்றும் கூறுகிறாய். உமது அன்பு
நிலையானதாக இல்லை” என்று கூறுகின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக