தொல்தமிழர்
உலகம் கடல் நீரால் சூழப்பட்டது. உலகின் உள்ளே தங்கிவிட்ட வாயுக்கள் அழுத்தம் தாங்க
முடியாமல் வெடித்து எரிமலையாக வெளிவந்தது. அவற்றினின்று
வெளிவந்த குழம்புகள் தண்ணீரால் இறுகி பாறைகளும், மலைகளும்,
நிலமும் உருவாயின. நிலப்பகுதி பல
கண்டங்களாகப் பிரிந்து இருக்காமல், ஒரே நிலப்பகுதியாக இருந்தது. அதனைப் பங்கேயா என்று
அழைத்தனர். பங்கேயாவில் உள்ள புதைவடிவ மண் நம்
தமிழகத்திலும் காணப்படுகின்றது. எனவே உலகில் நிலம்
தோன்றிய காலத்திலிருந்தே தமிழக நிலப்பகுதி இருந்துள்ளது என்பதை உணரலாம்.
குமரிக்கண்டம்
சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நிலப்பகுதியாக விளங்கிய பங்கேயா இரண்டாக
உடைந்தது. அது வடக்கு தெற்கு என இரண்டு கண்டங்களாகப் பிரிந்தது. வடக்குப் பகுதி “இலாராசியா” என்றும் தெற்குப் பகுதியை “கோண்டுவானா” என்றும் அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக்
கோண்டுவானா கண்டம் பிளவுபட்ட பின்னர் பழந்தமிழ்நாடு தனியாகவும், ஏனைய நாடுகள் தனியாகவும் பிரிந்தன. இந்த நிலப்பரப்பை உலக கடல் ஆய்வு வல்லுநர்கள் இலெமூரியா என்று அழைத்தனர். இலெமூர் என்ற பாலுட்டிகள்
வாழ்ந்த நிலப்பகுதியாக இருந்தமையால் அதன் பெயரிலேயே இக்கண்டம் அழைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் இதனைக் குமரி என்று அழைத்தனர். குமரி நிலத்தின் தென்பகுதியில் பரவியிருந்த மலைத்தொடரின் பெயர் குமரி மலை
என்றும், அந்நிலத்தின் வடபகுதியில் ஓடிய ஆறு குமரி ஆறு
என்றும் வழங்கப்பட்டது.
முதல்
உயிரினத் தோற்றம்
குமரிக்கண்டம் உயிர்கள் தோன்றுவதற்குத்
தேவையான தட்ப வெப்ப நிலைகளைக் கொண்டிருந்தது. அக்கண்டத்தில்
கார்பன் கூட்டுப் பொருட்கள் மிகுதியாக இருந்தமையால் உலகின் முதல் உயிரினமான நீலப்
பச்சைப் பாசி தோன்றியது. இவை பல கோடி ஆண்டுகளுக்குப் பின் மாற்றம் அடைந்து
நீர்வாழ் செடிகளாக மாறின. இவை கார்பன் டை ஆக்ஸைடை
உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளிவிடத் தொடங்கின. அதனால் ஓசோன் மண்டலம் உருவானது. இந்த
ஓசோன் மண்டலம் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து உலகைக் காப்பாற்றி பல்வேறு
உயிரனங்கள் தோன்றக் காரணமாக அமைந்தது. பிறகு குமரிக்கண்டத்தில்
ஊர்வன, பறப்பன, நடப்பன
உள்ளிட்ட உயிர்கள் தோன்றின. டைனோசர் என்ற உயிரினம் தோன்றி அதில் இருந்து பல
பறவையினங்கள் தோன்றின. பல கோடி ஆண்டுகளுக்குப் பின் பின்னர் மாந்தக் குரங்கினம் தோன்றியது. அவற்றின்
பரிணாம வளர்ச்சியே மனிதன் ஆவான் என உயிரியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது மனிதன் உடல் அளவிலும் மனதளவிலும் படிப்படியாக மேம்பட்டுக் கொண்டிருந்த காலம் ஆகும். உணவு திரட்டுதல், விலங்குகளை வேட்டையாடுதல், விலங்குகளைப் பழக்குவித்தல் என வரலாற்றுக்கு விளக்கமாக இருப்பது வரலாற்றுக்கு முந்தைய தொல்பழங்காலமாகும். தொல்பழங்கால வரலாற்றை அறிவதற்கு எழுத்து வடிவச் சான்றுகள் இல்லை. அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற கற்கள், பானை ஓடுகள் மற்றும் உலோகக் கருவிகள், ஓவியங்கள், எலும்புகள் முதலியவையே சான்றுகளாகும். இவற்றின் உதவியுடனும், பின் வந்த இலக்கியச் சான்றுகள், மொழி ஆய்வு, சமூகவியல் - மானுடவியல் ஆய்வு ஆகியவற்றின் துணையுடனும் வரலாற்றுக்கு முந்தைய கால தொல் தமிழரின் வரலாற்றைக் கால அடிப்படையில் பழைய கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் (உலோகக்காலம்) என்ற பிரிவில் அடக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக