யாம்
பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே
வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்
வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க்
கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார்
அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும்
ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே
எந்தோழி பரிலோர் எம்பாவாய்.
விளக்கம்
வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளியாகப் பிரகாசிக்கும் நம் சிவபெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயா? அந்த மகாதேவனின் பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது வீதியெல்லாம் நிறைந்தது. அதைக் கேட்ட ஒரு பெண் பக்தி மேலீட்டால், விம்மி விம்மி அழுதாள். மலர்ப் படுக்கையில் இருந்து புரண்டு தரையில் விழுந்து மயக்கமானாள். சிவபெருமானின் மீது அவள் கொண்ட அன்பைக் கண்டு வியக்கிறோம். ஆனால், நீயோ உறங்கிக் கொண்டு இருக்கிறாய்! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!
பாடல் எண் - 2
பாசம்
பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்
போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும்
வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி
இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும்
இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும்
மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன்
சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு
அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
விளக்கம்
“அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இரவு பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும்போது “ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர்ப் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய்” என்றனர் தோழிகள். உறங்குபவள் எழுந்து, “தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்குப் பதிலளித்த தோழியர், “ஒளி பொருந்திய திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக” என்றனர்.
பாடல் எண் - 3
முத்தன்ன
வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன்
ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப்
பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர்
ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம்
புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ
நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம்
அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும்
வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
விளக்கம்
முத்துப் போன்ற புன்னகை கொண்ட பெண்ணே! கடந்த
ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்பே நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன்
என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்கத் தித்திக்க அவன்
புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும்
எழ மறுக்கிறாய். கதவைத் திற” என்றனர். தூங்கிக் கொண்டிருந்த
தோழி, ஏதோ அறியாமல் தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல்
பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். சிவ பக்திக்கு நான் புதியவள். என் தவறைப்
பெரிதுபடுத்துகிறீர்களே!” என மனம் வருந்திக் கூறுகின்றாள்.
வந்த தோழியர் அவளிடம், “அப்படியில்லை! இறைவன்
மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம்
படைத்தவர்களாலேயே சிவபெருமானைப் பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ
சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம்”என்றனர்.
பாடல் எண் - 4
ஒண்ணித்
திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக்
கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்
கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத்
துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்
கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை
பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு
நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக்
குறையில் துயலேலோர் எம்பாவாய்.
விளக்கம்
“ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை?” என்ற பெண்களிடம், உறங்கிய பெண், “அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய அனைத்துத் தோழிகளும் வந்துவிட்டார்களா?” என்றாள். எழுப்ப வந்தவர்கள் ‘உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண்ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு” என்று கேலி செய்தனர்.
பாடல் எண் - 5
மாலறியா
நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம்
என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு
தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே
விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும்
நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும்
பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம்
இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி
பரிசேலோர் எம்பாவாய்
விளக்கம்
“மணம் வீசும் கூந்தலை உடைய பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது திருவடியையும், திருமுடியையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல. இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனைப் புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்டப் பெருமைக்குரியவனை உணர்ச்சிப் பெருக்குடன் சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற” என்று தோழியை எழுப்புகிறார்கள் பெண்கள்.
பாடல் எண் - 6
மானே
நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே
எழுப்புவன் என்றலும் நாணாமே
போன
திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே
நிலனே பிறவே அறிவரியான்
தானே
வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார்
கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே
உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும்
தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்
விளக்கம்
மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், “உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர்களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே, உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாட எழுந்து வா” என்றனர்.
பாடல் எண் - 7
அன்னே
யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்
கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள்
கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன்
னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை
என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள்
வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப்
பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே
துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம்
“பெண்ணே ! தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு,
ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே “சிவசிவ” என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய
சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல்
உருகி உணர்ச்சி வசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம்
போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம். இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்குக் காரணம் என்ன? பெண்ணே!
பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ
நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ
என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா?” என்றனர்.
பாடல் எண் - 8
கோழிச்
சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில்
இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில்
பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில்
விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி!
ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான்
அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி
முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை
பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.
விளக்கம்
தோழியை எழுப்ப வந்த பெண்கள், “அன்புத் தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருளை நீக்கும் வண்ணம் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளைப் பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். உறக்கத்துக்குச் சொந்தமாகி விட்டாய்! இன்னும் பேசமாட்டேன் என்கிறாய்! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனைப் பாடி மகிழ உடனே புறப்படு” என்றனர்.
பாடல் எண் - 9
முன்னைப்
பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப்
புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப்
பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார்
தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே
எம் கணவர் ஆவார்
அவர்
உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே
எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன
குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
விளக்கம்
கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது
என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் இலட்சம் ஆண்டுகள்
கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம் என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம்
புதுமையான சிவனே! உன்னைத் தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே
பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்குக்
கணவர்களாக அமைய வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்குக் கிடைத்த பரிசாகக்
கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த நற்பாக்கியத்தை
எங்களுக்குத் தந்தால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற
நிலையைப் பெறுவோம்” என்றனர்.
பாடல் 10
பாதாளம்
ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார்
புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை
ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல்
விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா
ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில்
குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர்
ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப்
பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம்
கோயில் திருப்பணியைச் சார்ந்து வாழும் பெண்களே!
சிவபெருமானின் பெருமையுடைய திருப்பாதங்கள் ஏழுபாதாள உலகங்களையும் கடந்து கீழே
இருக்கிறது. சிவனின் திருமுடியானது வானத்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப்
பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. உமையம்மையைத் தன் மேனியில் ஒரு பாகமாகக்
கொண்டதால் அவன் ஒரே திருமேனியுடையவன் அல்லன் என்பது உண்மையாகிறது. விண்ணில் உள்ளவர்களும், பூலோகத்தில் உள்ளவர்களும்
ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. தவம் கொண்ட முனிவர்களுக்கும், ஞானிகளுக்கும் அவன்
நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவன்
பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? எந்தப்
பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? என்பதைக் கூறுவீர்களா?
என்று வேண்டினர்.
முற்றும்
நன்றி - தினமலர் திருவெம்பாவை மார்கழி ஸ்பெஷல்.
C.Keerthana Bsc chemistry thanks for the understandable notes
பதிலளிநீக்குS.ishali bsc chemistry thanks for the notes mam
பதிலளிநீக்குS.jayashree 2nd b.sc chem .....notes were understandable.... thnk you mam
பதிலளிநீக்குK. Saranya. Bsc chemistry 2nd year. Arumaiyana pathivu amma
பதிலளிநீக்குVismaya.K.K ,2nd B.sc.chemistry .
பதிலளிநீக்குArumaiyana padhivu amma
Keerthna. K
பதிலளிநீக்குBsc chemistry 2nd yr
Thanku for the notes mam
K. Sandhiya bsc n&d bsec 2ndyr.arumaiyana pathivu amma
பதிலளிநீக்குV. Madhumitha 2nd bsc chemistry, thank you for the notes mam
பதிலளிநீக்குSubhashini.P
பதிலளிநீக்குBsc N&D bsec
Thanks for the notes mam
S.Sruthi
பதிலளிநீக்கு2nd year bsc.chemistry
Thanks for the notes mam
C. Kayalvizhi
பதிலளிநீக்கு2nd yr chemistry
Thanks for the notes mam
H.Yuvashree bsc chemistry 2ndyr thanks for ur notes mam
பதிலளிநீக்குRishi vanthini.v
பதிலளிநீக்குN&d b sec 2 ND year
It was nice and useful mam
V.Swetha
பதிலளிநீக்குB.sc chemistry 2nd year
Arumaiyana pathivu amma
S.D.Chandhini
பதிலளிநீக்குBsc chemistry 2nd year
Thank you for the explanation mam
G. Jayashree
பதிலளிநீக்கு2nd B.sc chemistry
Arumaiyana pathivu amma.
M.subhadra
பதிலளிநீக்குBsc N&D bsec
Thank you for the notes mam
M.subhadra
பதிலளிநீக்குBsc N&D bsec
Thank you for the notes mam
S. Vinisha.. 2nd bsc chemistry.. Nandri amma
பதிலளிநீக்குS. Yamuna Devi
பதிலளிநீக்குBsc.Chemistry- 2 nd year
Thanks for your notes mam...
S. Manisha, 2nd year bsc.chemistry.thank you for the notes mam
பதிலளிநீக்குS. Manisha, 2nd year bsc.chemistry.thank you for the notes mam
பதிலளிநீக்குYamini. J,N & D B sec, Thank you mam
பதிலளிநீக்குShakila.E
பதிலளிநீக்குBsc N&D 2nd year
Thank you mam, for the notes
Reshma 2 nd yr it's very understandable mam
பதிலளிநீக்குE. Sivaranjani
பதிலளிநீக்குB. SC chemistry 2nd year
Thank you mam,its very useful.
S.priyadharshini
பதிலளிநீக்குB.sc chemistry 2nd yr
Thank you so much mam
V.Anu
பதிலளிநீக்கு2nd bsc chemistry
Thanks for your notes mam.
A.Soniya
பதிலளிநீக்குB.Sc N & D 2 nd year
Thank you mam
A.Soniya
பதிலளிநீக்குB.Sc N & D 2 nd year
Thank you mam
M. ASMIYA BSC CHEMISTRY Il year
பதிலளிநீக்குThank you for notes mam
தெளிவான விளக்கம் nan
பதிலளிநீக்குP.Jayapradha
B.sc(chemistry )2nd year
A. Umul Fowmidha
பதிலளிநீக்கு2nd Bsc,N&D
Thank u for the notes
Yogeswari.D
பதிலளிநீக்குN&d b'sec
Thank you for the notes mam
S.Snegha(02/09/2001)
பதிலளிநீக்கு2nd year n&d'b'
Thank u mam very useful