வியாழன், 14 மார்ச், 2024

சமயக் காப்பியங்கள் - கம்பராமாயணம், பெரியபுராணம், தேம்பாவணி, சீறாப்புராணம்

 சமயக் காப்பியங்கள்

1. கம்பராமாயணம்

கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர்  கம்பர்அவரது கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாகப் போற்றப்படுகிறதுவடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்தார் கம்பர்இக்காப்பியம் கம்பநாடகம்கம்ப சித்திரம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனஇந்நூலில்பாலகாண்டம்அயோத்தியா காண்டம்ஆரணிய காண்டம்கிட்கிந்தா காண்டம்சுந்தர காண்டம்யுத்த காண்டம்  ஆகிய ஆறு காண்டங்களும், 113 படலங்களும், 10,500க்கும் மேற்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர்

கம்பர் சோழநாட்டில் திருவழுந்தூரில் பிறந்தவர்தந்தையார் பெயர் ஆதித்தன்காளியின் அருளால் கவி பாடும் ஆற்றல் பெற்றவர்இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு எனவும் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கூறப்படுகின்றதுஇவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார்தம்மை ஆதரித்த வள்ளலைக் கம்பர் தம் காப்பியத்தில் பத்து இடங்களில் பாடியுள்ளார்இராமகாதையைத் தவிர ஏர் ஏழுபதுதிருக்கை வழக்கம்சரசுவதி அந்தாதிசடகோபர் அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

2.பெரியபுராணம்

பெரிய புராணம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டதுசைவ சமயத்தின் பெருநூலாக இந்நூல் கருதப்படுகிறதுசுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகைநம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொடர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூல்களாகக் கொண்டும்சேக்கிழார் பல ஊர்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டதுஇதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர்இந்நூல் 2 காண்டங்களையம் 13 சருக்கங்களையும், 4253 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் கூறுகின்றதுபன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது.

சேக்கிழார்

இந்நூலை இயற்றியவர் சேக்கிழார்இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் மரபில்சேக்கிழார் குடியில் தோன்றிவர்இயற்பெயர் அருண்மொழித் தேவர்சோழநாட்டை ஆண்ட குலோத்துங்கச் சோழன்சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டம் கொடுத்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான்இவ்வேந்தனது வேண்டுகோளுக்கிணங்கி பெரியபுராணத்தை இயற்றினார் சேக்கிழார்இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

3.சீறாப்புராணம்

முகமது நபியின் வரலாற்றைப் பாடும் இசுலாமியக் காப்பியமாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் உமறுப்புலவர். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் கம்பர் போன்று பாடவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை மீறாமல் காப்பியமாகப் படைத்தவர். சீறா என்பது சீரத் என்னும் அரபுச் சொல்லின் திரிபாகும். இது வரலாறு என்னும் பொருளை உடையது. இந்நூலில் விலாதத்துக் காண்டம், ஹிஜரத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம் என்ற மூன்று காண்டங்கள் அமைந்துள்ளன. 5027 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

உமறுப்புலவர்

இந்நூலின் ஆசிரியரான உமறுப்புலவரின் இயற்பெயர் செய்யது காதர் மரைக்காயர். வள்ளல் சீதக்காதி என்பவரால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார்.

                                        4.தேம்பாவணி 

நூல் குறிப்பு

தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர். இந்நூலில் மூன்று காண்டங்கள், முப்பத்தாறு படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன.

·       தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.

·       தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.

இந்நூலின் பாட்டுடைத் தலைவன் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர். இந்நூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்என்பர்.

ஆசிரியர் குறிப்பு

வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டான்டைன் ஜோசப்பெஸ்கி. கான்ஸ்டான்டைன் என்னும் இத்தாலி மொழிச் சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள். தமிழ் மீது கொண்ட பற்றால்  தம் பெயரை “தைரியநாதசாமிஎன மாற்றிக்கொண்டார். தமிழ்ச் சான்றோர் இவரை வீரமாமுனிவர் என அழைத்தனர். 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும், தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கை எய்தினார்.

திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

நாமக்கல் கவிஞர் - கத்தியின்றி ரத்தமின்றி

 

நாமக்கல் கவிஞர்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!

ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே!

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் .

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே .

கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட!

காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி

மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே!

விளக்கம்

   நாமக்கல் கவிஞர் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இப்பாடலில் காந்தியின் அகிம்சை நெறியில் தேசத்திற்காகப் போராட வருமாறு மக்களை அழைக்கின்றார். 

    கத்தியும் இல்லாமல் இரத்தமும் இல்லாமல் ஒரு யுத்தம் நடைபெறுகின்றது. அது இந்திய விடுதலைப் போரை முதன்மைப்படுத்துகின்றது. உண்மையான வழியில் போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்ற யாவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வாருங்கள்!.

    ஒளிந்து கொண்டு பகைவர் மீது குண்டு எறிந்து கொல்லுகின்ற விருப்பம் இல்லாத இந்தப் போராட்டத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது. பகைவர்களை அழிக்கக் குதிரைப்படை இல்லை. யானைப்படை இல்லை.  உயிர்களைக் கொல்லும் விருப்பம் இல்லை. எதிரி என்று யாரையும் எண்ணுவதில்லை. யார் மீதும் கோபம் இல்லை. அவர்களை வென்றாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. 

    தனக்குத் துன்பத்தையே கொடுத்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது சாபம் இடுவதில்லை. பாவத்தின் செய்கைகளை நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை. ஆனாலும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

    இப்படி ஒரு மாறுபட்ட போரை யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது.  முன்பு நாம் செய்த ஏதோ ஒரு புண்ணியத்தால் காந்தி என்ற சாந்தம் நிறைந்த மகானை இத்தேசத்தில் நாம் பெற்றிருக்கின்றோம். அவர் காட்டுகின்ற அகிம்சையின் செம்மையான வழியில், மனிதர் எவருக்கும் தீங்கு நேராத முறையில் நடைபெறுகின்ற இந்தப் போரில் கலந்து கொள்ள அனைவரும் வாரீர் என தேச மக்களை அழைக்கின்றார் நாமக்கல் கவிஞர்.

 

சனி, 9 மார்ச், 2024

தம்பிக்கு - மு.வரதராசனார்

 

தம்பிக்கு - மு.வரதராசனார்

முதல் கடிதம்

முன்னுரை

            டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தம்பிக்கு என்ற நூலில், வளவன் என்னும் அண்ணன் தன் தம்பி எழிலுக்கு எழுதுவதுபோல பல கடிதங்களை எழுதியுள்ளார். அக்கடிதங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் இளைஞர்கள் எவ்வாறு காக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. முதல் கடிதத்தில் அவர் இளைஞர்களுக்குக் கூறிய அறிவுரைகளைப் பின்வருமாறு காணலாம்.

நன்மை - வன்மை

 நன்மை, வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு. நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் வாழ்க்கையில் துன்புற்று வீழ்கின்றர். வல்லமை மட்டும் பெற்றவர்கள் எதிர்பாராத வகையில் அழிந்து போகின்றனர். இதற்கு நாடு, வீடு எதுவும் விதிவிலக்கல்ல. அதன்படி தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனி வல்லவர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உடல் - உள்ளம்

வாழ்க்கையில் ஒன்றை மட்டும் போற்றுகின்றவன் வெற்றி பெறுவதில்லை. உடலை மட்டும் போற்றி வாழ்ந்தால், உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீயவழியில் செலுத்தி அழிக்கின்றது. உள்ளத்தை மட்டும் தூய்மையாகப் போற்றுகின்றவனுக்கு, உடல் பல நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து, அவனுடைய உள்ளத்தின் அமைதியைக் கெடுத்து அழிக்கின்றது. எனவே, உடல், உள்ளம் இரண்டையும் வலிமையாகவும், தூய்மையாகவும் காப்பதே கடமையாகும்.

அறநெறி – பொருள்நெறி

வாழ்க்கையில் அறநெறியும் வேண்டும், பொருள் நெறியும் வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார். அறத்தை நினைத்து பொருளை மறக்கும்படியாகவோ, பொருளைப் போற்றி அறத்தை மறக்கும்படியாகவோ அவர் கூறவில்லை. வாழ்க்கையின் பல பகுதிகளைப் போற்றி வாழ அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தேவை என்பது வள்ளுவர் கருத்து. திருக்குறளைப் பெற்ற நாம், திருவள்ளுவரையும் போற்றவில்லை. திருக்குறளையும் போற்றவில்லை. போற்றினால் நம் வாழ்வு வளம் பெறும்.

தமிழ்மொழி – வன்மை மொழி

நல்ல மொழியான தமிழை வன்மை பொருந்திய மொழியாக நாம் ஆக்கவில்லை. தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு அளிக்கவில்லை. நீதிமன்றங்களில் உரிமை தரவில்லை. ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கவில்லை. வல்லமை இல்லாத நன்மை என்றும் வாழாது. நல்ல இசை தந்த யாழ் என்னும் இசைக்கருவி புறக்கணிக்கப்பட்டு நாளடைவில் மக்கள் மனதில் இருந்து நீங்கிவிட்டது. தற்போது தமிழ் மொழிக்கும் அதே நிலைதான் இருக்கின்றது.

பொதுமக்கள் - களிமண்

பொதுமக்களின்  விருப்பம்போலவே ஆட்சி நடக்கின்றது என்று கூறுவது தவறு. காரணம் பொதுமக்கள் போரை விரும்புவதில்லை. அணுகுண்டை விரும்பவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தை, வறுமையை விரும்பவில்லை. தங்களின் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் எண்ணித் தங்கள் தேவையை உணரத் தெரியாத களிமண்ணாக பரந்து விரிந்து இருக்கின்றனர். அதனால் யார் யாரோ அவர்களைப் பிசைந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவங்களைச் செய்து கொள்கின்றனர்.

கடமை – மேடைப் பேச்சு

களிமண் பிசைகின்றவர்களின் கைகளாவது நாட்டையும் மொழியையும் பற்றி கவலைப்படுவதுண்டா? இல்லை. அவர்களை மாற்றுவதற்காக, நாம் ஏதேனும் செய்தோமா? அதுவும் இல்லை. ஒன்றும் செய்யாமல் தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்து விடும் என்று எண்ணிக் கொண்டு காலம் கழிப்பது குற்றம். மேடையில் வீறு கொண்டு பேசுவதைச் சற்று நிறுத்திவிட்டால் இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு உண்டாகும். மேடையின் மகிழ்ச்சி கடமையை மறக்கச் செய்கின்றது. “இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக” என்று கூறிய வள்ளுவரை எண்ணிப் பார்க்க வேண்டும்.

முடிவுரை

இன்றைய உலகம் வல்லமை மிகுந்த மாமியார்போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது. ஆனால் தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்காதவாறு காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு என்று இன்றைய இளைஞர்களுக்கு அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.

 

இரண்டாம் கடிதம்

முன்னுரை

மேடைப்பேச்சு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, நம்மை சோம்பேறிகளாக்குகின்றது என்பது ஆசிரியரின் கூற்று. ஆகையால் உணரச்சிக் கொந்தளிப்பால் வீரமான வசனங்களைப் பேசுவது வீணான காரியம் என்பதை இக்கடிதத்தின் வாயிலாகக் குறிப்பிடுகின்றார் மு.வரதராசனார்.

வீண் கனவு அல்ல

            “திருக்குறள் ஓதியே திருமணம் நடைபெற வேண்டும். தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்மறைகள் ஓத வேண்டும். அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். ஆளுநர் தமிழில் கையாப்பம் இட வேண்டும்“ என்ற இவை யாவும் வீண் கனவு என்று ஒதுக்கிவிட முடியாது. தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன்தான் இவற்றை வீண் கனவு என்று குறிப்பிடுவான். நம் தாயை நாம் வழிபட்டு, நம் குடும்பக் கடமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது, இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குறுக்கிடுவானானால் அவனைப் பகைவன் என்று ஒதுக்குவதே கடமையாகும்.

தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவது கனவு அல்ல; தமிழரின் கடமை. கோயில்களில் தமிழ் மறை ஓதுவது கனவு அல்ல; அவற்றின் பெருமை காத்த சான்றோர்களுக்கு நன்றியுணர்வைத் தெரிவிக்கும் கடமை. அதிகாரிகளும், ஆளுநரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்பது கனவு அல்ல; வங்காளத்திற்குத் தொண்டு செய்ய சென்றபோது, அந்த நாட்டு மொழியில் கையெழுத்திட வேண்டும் என்று வங்காளி எழுத்தைக் கற்றுக் கொண்ட காந்தியடிகளின் நெறி.

தமிழரின் குறை

பிறருடைய சொல்லுக்கு மயங்குவது தமிழரின் மிகப் பெருங் குறையாக இருக்கின்றது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டு, தான் உணர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்றுகின்றனர். தமிழர் நெஞ்சம், உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பண்பட்டு வந்தது. அதனால் சொல்கின்றவர் யார்? உண்மையாக சொல்கிறாரா? நம்மை ஏமாற்றச் சொல்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், அந்த கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொடங்கி விடுவர்.  விளைவு “புறமுதுகு காட்டாத தமிழர்களை இதோ என் சொல்லால் வீழ்த்தி விட்டேன். ஒற்றுமையாக இருந்தவர்களைப் பிரித்து விட்டேன். இனி, தமிழர்களே தமிழர்களை அழித்துக் கொள்வார்கள். நமக்குக் கவலை இல்லை” என்று பகைவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். வாய்ச்சொல் நேர்மையானதாக இருக்கலாம். அதைக் கொண்டு ஒருவரை நம்பிவிடக்கூடாது. அவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்த பிறகே நம்ப வேண்டும் என்று வள்ளுவரும் குறிப்பிடுகின்றார்.

மொழிப்பற்று

            மொழியால் இனம் அமைவதும், நாகரிகம் அமைவதும், நாடு அமைவதும் நாட்டின் அமைப்புக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மைகள்.  இவற்றை எல்லாம் பொய் என்று உபதேசம் செய்கிறவர்கள் நம்மைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவர்கள். நாட்டுப் பற்றையும், இனப்பற்றையும், பொருட்பற்றையும் வல்லரசுகள் முதலில் கைவிட்டால் உலகம் ஒரு குடும்பமாக வாழும் குறுகிய நாட்டுப் பற்று அங்கே ஒழிந்தால், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொதுப் பாடத்தை வாழ்ந்து காட்டத் தொடங்கிவிடுவான் தமிழன். எனவே, தமிழன் மற்றவர் சொல் கேட்கும் பேதை ஆகிவிடக்கூடாது. உலகம் ஒரு குடும்பமாய் அன்பாய் வாழக் கற்றுக் கொள்ளும் வரையில் தமிழனுக்குத் தற்காப்பு உணர்ச்சி கட்டாயம் வேண்டும். தமிழர்களைக் கடமைப்பற்று உடைய செயல் வீரர்களாக ஆக்க வேண்டும்.

முடிவுரை

            இன்று தமிழர்க்கு வேண்டியது அன்றாட கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே. மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் செயலில் காட்ட முனைவதே சிறப்பு என்று அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.