செயற்கை நுண்ணறிவு
மனிதர் போன்று சிந்திக்கும் திறனையும், முடிவெடுக்கும் திறனையும் கொண்ட கணினி அமைப்புகளைக் குறிக்கும் ஒரு
தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு எனப்படுகின்றது. இந்நுண்ணறிவு
உயர்கல்வி, மெய்நிகர் உதவியாளர்கள், மொழிபெயர்ப்பு,
ஆராய்ச்சி போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது தொழில்நுட்ப
முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது. தொழில்களில் புரட்சியை
ஏற்படுத்துகிறது. நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்
விதத்தையும் நம்மைச் சுற்றியுள்ள தகவல்களையும் மாற்றியமைக்கிறது.
செயற்கை நுண்ணறிவின் தந்தை
ஜான் மேக்கர்த்தி என்பவர் 1956இல் செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். அதனால் இவரே செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று அறியப்படுகின்றார்.
செயற்கை நுண்ணறிவின் நோக்கம்
கணினித் துறையில், வருங்காலத்தில் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில்
அதிகமான வேலை வாய்ப்புகளை அளிக்கக் கூடிய துறையாக செயற்கை நுண்ணறிவு (Artificial
Intelligence) (AI) துறை விளங்கும். இதன் மூலம் மனிதனைப் போன்று அல்லது
மனிதர்களை விட சிந்திக்கும் மற்றும் செயல்படக் கூடிய அறிவுத் திறன் கொண்ட கணிப் பொறிகளை உருவாக்குவதே
இத்துறையின் நோக்கமாகும். இத்துறை, மனிதனின் பகுத்தறியும் திறனடிப்படையில், கற்றல், பகுத்தாய்தல், திட்டமிடல், உணர்தல், உள்ளுணர்தல், பார்த்தல், கேட்டல் ஆகிய பண்புகளைக் கொண்டு சூழ்நிலைக்கேற்ப முடிவுகள்
மேற்கொண்டு செயல்படுத்தக் கூடிய ஒரு பணியினை, கணினியினைக் கொண்டு செய்து முடிக்க
இயந்திரங்களை உ௫வாக்குவதாகும். எனவே, இத்துறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து
வருகின்றது. இத்துறை வளர்ச்சியடைந்து முழு வெற்றி பெற்று விட்டால் மனிதன் வேலை
செய்ய முடியாத இடங்களிலெல்லாம் கூட இயந்திர வடிவங்களைக் கொண்டு அவ்வேலைகளை
செய்து முடிக்கலாம். அவ்விடங்கள் விண்வெளியாகவோ அல்லது காற்று மாசடைந்த இடமாகவோ
இருக்கலாம்.
Windows 10 வருகைக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு வாயிலாக சூட்டிகைப்
பேசிகளின் செயலிகளில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது எனலாம். Cortana, Hound, ELSA (English Language Speech Assistant), Siftr
Magic Cleaner, Robin etc. போன்ற செயலிகள் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில்
உருவாக்கப்பட்டவையே. உன்னதமான வேலைவாய்ப்பை உலகமெங்கும் அள்ளித் தரக் கூடியதும் 2030 ஆம் ஆண்டில் அதிகமான நபர்கள் பணி செய்யக் கூடிய
துறையாகவும் செயற்கை நுண்ணறிவு Artificial
Intelligence (AI) துறை விளங்கும். மேலும், இத்துறையில் இந்தியா மிகப் பெரிய திறனறிவு பெற்றவர்களை
உடையதாகவும் இருக்கும் என்று பொருளாதார கணக்கீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.
7 வகையான செயற்கை நுண்ணறிவு (AI
செயற்கை நுண்ணறிவை பல்வேறு வகையான செயற்கை நுண்ணறிவாக
வகைப்படுத்தலாம்.
1. எதிர்வினை இயந்திரங்கள்
இந்த இயந்திரங்கள் செயற்கை நுண்ணறிவின் பழமையான வடிவமாகும்.
இந்த இயந்திரங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வினை புரியும். சான்று – பீட் ப்ளு,
ஐ.பி.எம்.
2. வரையறுக்கப்பட்ட நினைவகம்
இந்த வகையான செயற்கை நுண்ணறிவுக் கருவிக்கு குறிப்பிட்ட
அளவில் வரையறை செய்யப்பட்ட நினைவகம் உண்டு. சான்று – ஓட்டுநர் இல்லாத தானியங்கிக்
கார்கள்.
3. மனக் கோட்பாடு
இக்கோட்பாடு வகை நுண்ணறிவு
என்பது மற்றவர்களின் மனதினைப் புரிந்து கொள்வதைக் குறிக்கிறது. நம்பிக்கைகள், நோக்கங்கள்,
ஆசைகள், கருத்துகள் முதலானவற்றைப் புரிந்து
கொள்வதற்கும், புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படும்
செயற்கை நுண்ணறிவினைக் கொண்டிருக்கின்றது. இது இன்னும்
செயல்பாட்டிற்கு வரவில்லை.
4. சுய விழிப்புணர்வு
இது மனக் கோட்பாட்டின் அடுத்த கட்டமாகும், நாம் சுய விழிப்புணர்வு கொண்ட செயற்றை
நுண்ணறிவினை அடையும்போது, மனிதனைப் போன்ற விழிப்புணர்வைக்
கொண்ட, மனிதர்களைப் போலவே புத்திசாலியான, ஒத்த ஆசைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் செயற்கை நுண்ணறிவைப் பெறுவோம்.
5. செயற்கை குறுகிய நுண்ணறிவு (ANI)
இந்தக் கருவிகள் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய இயந்திர
கற்றல் வழிமுறைகளின் ஆதரவைப் பெறுகின்றன. உதாரணமாக, இயற்கை மொழி செயலாக்க செயற்கை நுண்ணறிவு,
குரல் கட்டளைகளை மட்டுமே அடையாளம் கண்டு பதிலளிக்க முடியும்.
6. செயற்கை பொது நுண்ணறிவு
செயற்கை பொது நுண்ணறிவு இயந்திரங்கள் மனிதர்களைப் போலவே
பல்வேறு பணிகளைச் செய்ய முடியும் என்பதால் இது வலுவான செயற்கை நுண்ணறிவு என்றும்
அழைக்கப்படுகிறது. சான்று - ChatGPT
7. செயற்கை சூப்பர் நுண்ணறிவு
இந்த வகை செயற்கை நுண்ணறிவு செயற்கை பொது நுண்ணறிவின்
திறன்களை மிஞ்சும் என்று கோட்பாடு செய்யப்பட்டு நம்பப்படுகிறது. எனவே, இது சூப்பர் AI என்றும்
அழைக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவின் கிளைகள்
செயற்கை நுண்ணறிவு பல
கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு.
1. இயந்திரக் கற்றல்
இது உண்மையான உலகின் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தரவை
பகுப்பாய்வு செய்ய, விளக்க
மற்றும் செயலாக்க ஒரு இயந்திரத்தின் திறனைக் கையாள்கிறது.
2. இயற்கை மொழி செயலாக்கம்
ஓர் இயந்திரம் எழுத்து மற்றும் பேச்சு மொழியைப் புரிந்துகொண்டு மீண்டும் தொடர்பு கொள்வதற்காக அதை ஒருங்கிணைக்கும் திறனை
வழங்குகிறது. இது வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சேவைகளை வழங்க முடியும்.
3. ரோபாட்டிக்ஸ்
ரோபாட்டிக்ஸ் என்பது செயற்கை நுண்ணறிவின் (AI) முக்கிய கிளைகளில் ஒன்றாகும். இது
முக்கியமாக பல்வேறு பயன்பாடுகளில் ரோபோக்களை வடிவமைத்து பயன்படுத்துவதை
உள்ளடக்கியது.
4. தெளிவற்ற தர்க்கம்
இது மருத்துவத் துறை, விண்வெளி ஆராய்ச்சி, வாகனங்களின் ஆட்டோமேஷன்
போன்றவற்றில் முடிவுகளை எடுக்க வேண்டிய சிக்கலான சிக்கல்களைத் தீர்க்க இது
பயன்படுத்தப்படுகிறது.
5. நிபுணர் அமைப்புகள்
இது ஒரு மனிதனின் நடத்தையைப் பின்பற்றி, அந்தத் துறையில் உள்ள நிபுணத்துவத்தின்
அடிப்படையில் ஒரு தீர்ப்பை வழங்கக்கூடிய AI அடிப்படையிலான
நிரலாகும். இந்த அமைப்புகள் வைரஸ்களைக் கண்டறிதல், கடன்
சுயவிவரங்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் தகவல்களை நிர்வகித்தல் ஆகியவற்றில்
பயன்படுத்தப்படுகின்றன.
6. கணினி பார்வை
கணினி பார்வை மனித பார்வைக்கு ஒத்திருக்கிறது. இது படங்கள்
மற்றும் வீடியோக்கள் போன்ற காட்சி உள்ளீடுகளை பகுப்பாய்வு செய்து அர்த்தமுள்ள
தகவல்களை மீட்டெடுக்க இயந்திரங்களை அனுமதிக்கிறது. இது பொதுவாக எக்ஸ்-கதிர்கள், சிடி ஸ்கேன்கள், எம்ஆர்ஐ
அறிக்கைகள், 3டி மாதிரிகளை உருவாக்குதல் போன்றவற்றில்
பகுப்பாய்வு செய்யப் பயன்படுகிறது.
செயற்கை நுண்ணறிவின் நன்மைகள்
- மருத்துவத் தறையில் நோயைக் கண்டறிவதில் மிகத் துல்லியமான முடிவுகளைக் காட்டுகின்றது. புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்குக் கொடுக்கப்படுகின்ற கதிரியக்க அறுவை சிகிச்சைகளில், நோய் பாதித்த பகுதிகளில் மட்டும் சிகிச்சை மேற்கொள்ள உதவுகின்றது.
- விண்வெளி ஆய்வுகளில் மிகப் பெரும் பங்காற்றுகின்றது.
- மனிதர்கள் செய்கின்ற துறை சார்ந்த தவறுகளை நீக்கப் பயன்படுகின்றது.
- மனித குலத்தின் பல ஆபத்தான வரம்புகளைக் கடக்க உதவுகின்றது. சான்றாக, செவ்வாய் கிரகத்திற்குப் பயணம் செய்வது, வெடிகுண்டை செயலிழக்கச் செய்வது, கடலின் ஆழமான பகுதிகளை ஆராய்வது என மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற செயல்களில் செயற்கை நுண்ணறிவு மிக திறமையாகச் செயல்படுகின்றது.
- இடைவேளை இல்லாமல் 24 மணிநேரமும் உழைக்க வைக்கலாம்.
- விவசாயத்தில் மனித உழைப்பை மிச்சப்படுத்தும் வகையில் விவசாய ரோபாக்கள் மூலம் விதைகள் நடுதல், அறுவடை செய்தல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, மண் பகுப்பாய்வு போன்ற அத்தியாவசிய விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
- சாட் ஜி.பி.டி. செயற்கை நுண்ணறிவு தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளில் இயந்திரக் கற்றலைப் பயன்படுத்திக் தேவையான பதில்களைத் தருகிறது.
- இராணுவத்துறை, வாகனத்துறை, சட்டத்துறை, தணிக்கைத்துறை, கலைத்துறை, அரசுத்துறை, நிதித்துறை முதலான துறைகளிலும் செயற்கை நுண்ணறிவால் பங்களிப்பைத் தருகின்றது.
- பல உற்பத்தித் தளங்கள், முழு தானியங்கி முறையில் இயங்கி வருகின்றன.
செயற்கை நுண்ணறிவின் தீமைகள்
- மனித மனத்தின் செயல்பாடுகள் வியப்பிற்குரியவை. அத்தகைய மனதை ஒரு கருவி ஆளுகை செய்வது என்பது மனிதன் தன்னையே இயந்திரத்திடம் அடிமையாக ஒப்படைப்பதற்குச் சமமாகும்.
- செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இயந்திரங்கள், கணினிகள் போன்றவற்றை அமைப்பதற்கு
பெரும் செலவுகள் தேவைப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக